கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு என்று தன் வேலைக்காரி என்னும் நாடகத்தின் வாயிலாக அறிவுறுத்தியவர் அறிஞர் அண்ணா ஆவார்.
கத்தியை தீட்டும் நுட்பம் எல்லோருக்கும் தெரியும்!
புத்தியைத் தீட்டும் நுட்பம் தான் பலருக்குத் தெரிவதில்லை!
கத்தி வன்பொருள் கண்ணால் காணமுடியும், கையால் தொடமுடியும் அதனால் அதனைத் தீட்டுவது மிகவும் எளிதாகிறது.
புத்தி மென்பொருள் கண்ணால் காணமுடியாது, கையால் தொடமுடியாது
அதனால் அதனைத் தீட்டுவது அரிதாகிறது.
புத்தன், இயேசு, காந்தி இவர்கள் புத்திசாலிகளா? உணர்வுகளைக் கையாளத் தெரிந்தவர்களா?
உணர்வுகளைப் புத்தியோடு கையாளத் தெரிந்தவர்கள் என்பதே சரியான பதிலாக இருக்கமுடியும். ஆம்!
உணர்வு! அறிவு!
என்னும் இரண்டில் நாம் எதனுடைய பேச்சைக் கேட்கிறோம்? எவ்வளவு கேட்கிறோம்? என்பதில் தான் நாம் புத்திசாலிகளா? முட்டாள்களா? சராசரி மனிதர்களா? என்ற பதிலும் அடங்கியிருக்கிறது.
அறிவெனப்படுவது யாது? என்னும் கேள்விக்கு வலைநண்பர்கள் பலரும் பல்வேறுவிதமான பதிலளித்து சிந்திக்கச் செய்தனர்
அறிவு, புத்தி, ஞானம், விவேகம், மதிநுட்பம் என பல சொற்களால் அழைக்கப்பட்டாலும் இவற்றின் பொருள் “சிந்தனை“ என்ற ஒன்றுதான்!
புத்தியை எப்படித் தீட்டலாம்??
கல்விச்சாலைகள்!
புத்தகங்கள்!
அனுபவங்கள்!
சூழல்கள்!
புரிதல்கள்!
சிந்தனைகள்!
என நாம் நம் புத்தியைத் தீட்டிக் கொள்ள எத்தனையோ கருவிகள் உள்ளன.
நான் என் புத்தியைத் தீட்டிக்கொள்ளப் பயன்படுத்திய கருவிகளை வரிசைப்படுத்துகிறேன்.
சங்க இலக்கியம்
திருக்குறள்
புத்தகங்கள்
அனுபவங்கள்
சிந்தனைகள்
நண்பர்கள்
கல்விச் சாலைகள்
மாணவர்கள்
குழந்தைகள்
உறவுகள்
இன்னும் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
என்னை நீண்டகாலம் அசைபோடச் செய்த சிந்தனைகள் சில..
- மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை!
- பித்தனின் பேச்சிலும் சித்தனின் கேள்விக்குப் பதில் இருக்கும்!
- நன்றாகப் படிப்பவன் புத்தகத்தோடு இருப்பான்! நன்றாகப் படித்தவன் புத்தகத்தில் இருப்பான்.
- "பக்தி வந்தால் புத்தி போகும். புத்தி வந்தால் பக்தி போகும்"
தமிழ் உறவுகளே..
எனது புத்தியைத் தீட்டிக் கொள்ள நான் பயன்படுத்தி வரும் கருவிகளைப் பட்டியலிட்டிருக்கிறேன்..
இதுபோல நீங்கள் உங்கள் புத்தியைத் தீட்டிக்கொள்ளப் பயன்படுத்திவரும் கருவிகளை வரிசைப்படுத்தவே இந்த இடுகையைக் களமாக்கியுள்ளேன்..
புத்தியைத் தீட்டலாம் வாங்க....
எனக்கு முதலில் நினைவுக்கு வருவது உங்களைப் போன்ற புத்தியைத் தீட்டுபவர்களிடம் பழகுவதன் மூலம் நானும் புத்தியைத் தீட்டிக் கொள்ளலாம் என்பதுதான். மற்றவற்றை யோசிக்கிறேன்.
ReplyDeleteSuper . .
ReplyDeleteவாழ்க்கையின் ஒரு நிலை வரை கல்விச்சாலைகள்;பின் புத்தகங்கள்,நாள் செல்லச் செல்ல அனுபவங்கள்.
ReplyDeleteநல்ல பகிர்வு குணசீலன்.
கத்தி பெரியதா இல்லை புத்தி பெரியதா என்ற மிகப்பெரிய போராட்டத்திற்கு பதில்
ReplyDeleteஇந்த மதன்மணியின் சில வரிகள்
கத்தி புத்தி இரண்டுமே பெரியது
கத்தியை தீட்டுபவன் கொல்லன் ஆகிவிடுகிறான்
புத்தியை தீட்டுபவன் அறிஞன் ஆகிவிடுகிறான்
இதில் எந்தவித பிரிவும் இல்லை ஆகவே
இவ்விருவரும் காலத்தை எவ்வகையில் சிந்திக்கின்றார்களோ
அவ்வகையில் தன்னுடைய இலக்கை அடைய முற்படுகின்றார்கள்
இதுவே நிதர்சனம்
இவ்விருவருக்கும் அறிவு ஒரே சம்ம் என்றாலும் கூட அதை யார் எவ்வகையில் பயன்படுத்துகின்றாரோ
அதில் வெற்றி காண்கிறார்.என்பது முடிவு
நல்ல அருமையான இடுகை
அண்ணா வாழ்த்துக்கள் வாழிய வாழியவே என்றே வாழ்த்துவம்
கலஞ்சென்றாலும் உங்கள் எழுத்து
என்றுமே வாடாத வசந்த மலர்
கற்க கசடற கற்பவை கற்ற பின் நிற்க அதற்கு தக, இது திருவள்ளுவர் வாக்கு.. இது தான் என் புத்தியை தீட்ட உதவுகிறது..
ReplyDeleteநல்ல பதிவு
ReplyDeleteமிக்க நன்றி சகா
அருமையான பகிவிற்க்கு நன்றி முனைவர் அவர்களே..
ReplyDeleteநன்றியுடன்
சம்பத்குமார்
அருமையான பள்ளிக் கூடமான இடுகை. எனக்கு முதலில் இவ் வுலகைக் காட்டிய அம்மா, அப்பா. பின் அப்பா மூலம அறிந்த நற்சிந்தனைகள். இவைகளை ஏற்று வளர பாடசாலை நெறிப்படுத்தியது. புத்தகங்கள் வாசிக்க மூளை உள்வாங்கி ஏற்றது. சூழல், உறவுகள் தந்தது பாடங்கள். இன்னமும் உங்களைப் பொன்றோரின் உறவின் சகவாசமும் என்னை நெறிப்படுத்துகிறது தொடர்கிறது. நன்றி சகோதரா. வாழ்க வளமுடன்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
சூப்பர் முனைவரே
ReplyDeleteNice.,
ReplyDeleteஅந்த நரகாசூரன் நினைவு நாள் மட்டும் தீபாவளி அல்ல.
நீங்கள் சிரித்து மகிழும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான்.
உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...
பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் ...
ReplyDeleteதங்களோடு பழகுவதில் நானும் மகிழ்ச்சியடைகிறேன் கணேஷ்
ReplyDeleteவருகைக்கு நன்றி இராஜா.
ReplyDeleteதங்கள் அனுபவ மொழிக்கு நன்றிகள் சென்னைப்பித்தன் ஐயா..
ReplyDeleteவருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் மணி.
ReplyDeleteஅழகாகச் சொன்னீர்கள் சூர்யஜீவா..
ReplyDeleteநன்றி நிவாஷ்
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி சம்பத்.
ReplyDeleteதங்கள் ஆழ்ந்த வாசிப்புக்கும்
ReplyDeleteபுரிதலுக்கும்
அனுபவ மொழிகளுக்கும் நன்றிகள் இலங்காதிலகம்
நன்றி ஸ்டாலின்
ReplyDeleteதங்களுக்கம் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் கருன்.
ReplyDeleteநன்றி அம்பாளடியாள்
ReplyDeleteபித்தனின் பேச்சிலும் சித்தனின் கேள்விக்குப் பதில் இருக்கும்!
ReplyDeleteபயனுள்ள பகிர்வுக்கு நன்றிகள்
அறிவும், அறியாமையும் யாருக்கென்று முதலாம் தன்னை அறியும் அறிவே அறிவு
ReplyDeleteவருகைக்கு நன்றி இராஜேஷ்வரி..
ReplyDeleteவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி யுவா..
ReplyDeleteஅருமை சகோ!நல்லதொரு அவசிய பகிர்வு.
ReplyDeleteஎன்னுடைய வலைப்பூவிற்கு தாங்கள் வருகை தந்தமைக்கு நன்றி..
ReplyDeleteபதிவுலகத்திற்கு சற்றே புதியவன் என்பதால் இன்றுதான் தேடாமலே உங்களின் வேர்களில் இணைந்தேன்..
உங்களின் பதிவுகள் தொடரட்டும்..வாழ்த்துக்கள்..
தமிழ் பதிவர்களை ஊக்கப்படுத்தும் முயற்சிக்கு உங்கள் ஒத்துழைப்பை பெரிதும் வேண்டி நிற்கின்றோம். முனைவரின் முயற்சிக்கு பாராட்டுக்கள்...
ReplyDelete>>>>உங்கள் பதிவினை cpede.com ல் மின்னஞ்சல் பதிவு முறையில் இணைப்பதன் மூலமாக உங்கள் தளத்திற்கும் வருகையாளர்களை அழைத்துச் செல்வீர்கள்.<<<<<<
விருந்தினர் முறையில், தமிழ் பதிவர்களினை ஊக்கப்படுத்தும் ஒரு சிறப்பு பதிவை பதிய உங்களை அன்புடன் அழைக்கின்றோம்..
மின்னஞ்சல் பதிவு விபரங்களை அறிய
http://cpedelive.blogspot.com/2011/10/blog-post_29.html
நன்றி!!!!!!!!!!!
கல்விச்சாலைகள்!
ReplyDeleteபுத்தகங்கள்!
அனுபவங்கள்!
சூழல்கள்!
புரிதல்கள்!
சிந்தனைகள்!//
புத்தியை வளர்த்து கொள்ள சொன்ன விசயங்கள் உண்மை மற்றும் அருமை நண்பரே!
"பக்தி வந்தால் புத்தி போகும். புத்தி வந்தால் பக்தி போகும்" //
ReplyDeleteஇதை ஒப்புக்கொள்வது கடினம்...
சிந்திக்கத் தூண்டும் அருமையான பதிவு
ReplyDeleteஅனுபவத்திலோ படித்தோ அறிந்ததை
அறிவு எனவும் அவற்றைப் பயன்படுத்துதலைத்
தீட்டுதல் எனவும் கொள்ளலாமா ?
த.ம 9
ஓவ்வொருதனிமனிதனுக்கும் தேவைப்படும் அவசியமான பதிவு. பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஉணர்வு என்பதை அடக்கி ஆள்பவன் உண்மையில் உயர்கிறான் !! மிகச் சிறந்த
ReplyDeleteமனிதனாகிறான் !! உண்மைதான் ஐயா !! சிறந்த கருத்துகள் ! நன்றி !