புத்தியைத் தீட்டுவது எப்படி?



த்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு என்று தன் வேலைக்காரி என்னும் நாடகத்தின் வாயிலாக அறிவுறுத்தியவர் அறிஞர் அண்ணா ஆவார்.

கத்தியை தீட்டும் நுட்பம் எல்லோருக்கும் தெரியும்!
புத்தியைத் தீட்டும் நுட்பம் தான் பலருக்குத் தெரிவதில்லை!

கத்தி வன்பொருள் கண்ணால் காணமுடியும், கையால் தொடமுடியும் அதனால் அதனைத் தீட்டுவது மிகவும் எளிதாகிறது.
புத்தி மென்பொருள் கண்ணால் காணமுடியாது, கையால் தொடமுடியாது
அதனால் அதனைத் தீட்டுவது அரிதாகிறது.

புத்தன், இயேசு, காந்தி இவர்கள் புத்திசாலிகளா? உணர்வுகளைக் கையாளத் தெரிந்தவர்களா?
உணர்வுகளைப் புத்தியோடு கையாளத் தெரிந்தவர்கள் என்பதே சரியான பதிலாக இருக்கமுடியும். ஆம்!

உணர்வு! அறிவு!
என்னும் இரண்டில் நாம் எதனுடைய பேச்சைக் கேட்கிறோம்? எவ்வளவு கேட்கிறோம்? என்பதில் தான் நாம் புத்திசாலிகளா? முட்டாள்களா? சராசரி மனிதர்களா? என்ற பதிலும் அடங்கியிருக்கிறது.

அறிவெனப்படுவது யாது? என்னும் கேள்விக்கு வலைநண்பர்கள் பலரும் பல்வேறுவிதமான பதிலளித்து சிந்திக்கச் செய்தனர்

அறிவு, புத்தி, ஞானம், விவேகம், மதிநுட்பம் என பல சொற்களால் அழைக்கப்பட்டாலும் இவற்றின் பொருள் “சிந்தனை“ என்ற ஒன்றுதான்!

புத்தியை எப்படித் தீட்டலாம்??

கல்விச்சாலைகள்!
புத்தகங்கள்!
அனுபவங்கள்!
சூழல்கள்!
புரிதல்கள்!
சிந்தனைகள்!
என நாம் நம் புத்தியைத் தீட்டிக் கொள்ள எத்தனையோ கருவிகள் உள்ளன.
நான் என் புத்தியைத் தீட்டிக்கொள்ளப் பயன்படுத்திய கருவிகளை வரிசைப்படுத்துகிறேன்.
  
   சங்க இலக்கியம்
திருக்குறள்
    புத்தகங்கள்
    அனுபவங்கள்
       சிந்தனைகள்
       நண்பர்கள்
 கல்விச் சாலைகள்
    மாணவர்கள்
       குழந்தைகள்
   உறவுகள்
இன்னும் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
என்னை நீண்டகாலம் அசைபோடச் செய்த  சிந்தனைகள் சில..
       
  •  மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை!       


  • பித்தனின் பேச்சிலும் சித்தனின் கேள்விக்குப் பதில் இருக்கும்!       


  • நன்றாகப் படிப்பவன் புத்தகத்தோடு இருப்பான்! நன்றாகப் படித்தவன் புத்தகத்தில் இருப்பான். 


  • "பக்தி வந்தால் புத்தி போகும். புத்தி வந்தால் பக்தி போகும்" 



தமிழ் உறவுகளே..
எனது புத்தியைத் தீட்டிக் கொள்ள நான் பயன்படுத்தி வரும் கருவிகளைப் பட்டியலிட்டிருக்கிறேன்..
இதுபோல நீங்கள் உங்கள் புத்தியைத் தீட்டிக்கொள்ளப் பயன்படுத்திவரும் கருவிகளை வரிசைப்படுத்தவே இந்த இடுகையைக் களமாக்கியுள்ளேன்..
புத்தியைத் தீட்டலாம் வாங்க....